please rate this..

Saturday, December 4, 2010

தமிழா தமிழா

நெஞ்சு கொதிக்குதடா...
விந்தையை என்னிச்சிரிக்குதட ...
தமிழே, தாயென முழங்கிடுவர் ..
தமிழ் அரசன் நானென முரசொலிப்பர் 
தமிழ் என் மூச்சென முட்டிடுவர்..
தமிழனே மட்டும் மறந்திருப்பர்..
தமிழுக்கென முழு வாழ்வென்பர் ..
தமிழ் வாழ்வும் உயிர் விடுவோமேன்பர் ...
தமிழின் ரத்தம்  கொதிகுதென்பர்..
தலைநகரத்தில் ஹிந்தியில் பேசிடுவர்..
தமிழுக்காய் என் உழைப்பென்பர்..
தமிழ்ப்போர் தொடுக்க அழைதிடுவர்...
தமிழ் உரைக்கா நா இனி எதற்கென்பர்....
தம் பிள்ளையை கான்வென்டில் சேர்த்திருப்பார் !
தமிழ் மானம் காக மோதிடுவர்..
தமிழினத்திற்காக வாதிடுவர் ...
தமிழ்ப்பேரரசன் இனி அவரென்பர்....
இல்லத்தில் தெலுங்கு பேசிடுவர்!
எத்தனை வசனங்கள்...
எத்தனை ஆண்டுகள்..
இன்னுமிங்கே பார்த்திருப்பீர் ..
தமிழ் மானம்,வீரம்,ஈரம்,..
என்போரைக் கண்டால்,கேட்டால் ..
இப்போதேனும்....புரிந்திடுவீர் !!!

No comments:

Post a Comment